search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சுக்கு பாலியல் தொந்தரவு"

    இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உறவினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நெடுமதுரையைச் சேர்ந்த 21 வயது நர்சு, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அண்ணன் முறை உறவினரான முருகேசன் (45) கடந்த பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், நேற்று மதுரை ஆஸ்பத்திரியில் பணி முடித்து வந்தபோது மீண்டும் பாலியல் தொல்லை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரித்த போலீசார் பெற்றோரை அழைத்து வரும்படி பெண்ணிடம் கூறி உள்ளனர். அவர் வீட்டில் சென்று தெரிவித்ததும், பெண்களின் தந்தை, உறவினர் முருகேசனிடம் சென்று தட்டிக்கேட்டனர். 

    அப்போது முருகேசன் அவரது மனைவி பாண்டியம்மன் உறவினர்கள் சுப்பிரமணி, மலர், பாலமுருகன், கிருமி ஆகிய 6 பேர் சேர்ந்து  நர்சை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூடக்கோவில் போலீசில் பெண்ணின் தந்தை புகார் செய்தார்.
    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி முருகேசன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    ×